Published : 06 Jul 2019 01:53 PM
Last Updated : 06 Jul 2019 01:53 PM
என்னை துன்புறுத்தவும், மிரட்டவும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வழக்கு தொடுத்து வருகின்றன, ஆனால் வாய்மையே வெல்லும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பேசுகையில் " எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயர் இருக்கிறது. நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும் " என்று பேசினார்.
இதனையடுத்து, பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, பாட்னா தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது ஐபிசி 500 பிரிவின் னைக்குரிய அவதூறு) கீழ் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி பாட்னா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பாட்னா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறேன். அரசியல் எதிரிகளான ஆர்எஸ்எஸூம், பாஜகவும் என்னை தன்னை துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் வழக்கு போடுகின்றனர். மேலும் வாய்மையே வெல்லும்’’ எனக் கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பை ராகுல் அவதூறாகப் பேசியதாகக் கூறி அந்த அமைப்பின் தொண்டர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக மும்பை நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT