Published : 06 Jul 2019 09:09 AM
Last Updated : 06 Jul 2019 09:09 AM
மத்திய பட்ஜெட் குறித்து ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று ட்விட்டரில் தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டார். அவற்றில் கூறியிருப்பதாவது:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘புதிய இந்தியா’வை உருவாக்குவதற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக கூறியிருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு அப்படி எதுவும் தெரியவில்லை.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஜீரோ. கிராமப்புற வளர்ச்சியில் ஜீரோ. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஜீரோ. நகர்ப்புறங்களுக்கு புத்துணர்வு அளிப்பதில் ஜீரோ என பட்ஜெட் ஜீரோவாக உள்ளது. இதுதான் புதிய இந்தியாவை உருவாக்குவதா? என்று விமர்சித்துள்ளார். பட்ஜெட், அம்பானிகளுக்கு ஆதரவாக உள்ளதா? விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளதா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்துக் கொண்டே ராகுல் பதில் அளிக்கையில், ‘‘இது நல்ல கேள்வி. இதன் பொருள் உங்களுக்கே புரிந்திருக்கிறது என்பதுதான். இது பணக்காரர்களுக்கு உதவும். ஏழைகளுக்கு உதவாது’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT