Published : 12 Jul 2019 08:29 AM
Last Updated : 12 Jul 2019 08:29 AM

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெற்ற மூத்த வழக்கறிஞர்கள் வீடு, அலுவலகத்தில் சோதனை

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெற்றது தொடர்பாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்த் குரோவர், இந்திரா ஜெய்சிங்கின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர்.

இவரது மனைவி இந்திரா ஜெய்சிங். இவரும் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இருவரும் இணைந்து  ‘லாயர்ஸ் கலெக்டிவ்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றனர். பெண்கள் உரிமை, எச்ஐவி நோயாளிகளுக்கான உதவி, புகையிலை எதிர்ப்பு, தன்பாலின உறவாளர்களின் உரிமைக்காக பணியாற்றி வருவதாக இந்த தொண்டு நிறுவனம் கூறுகிறது.

கடந்த 2006 முதல் 2015 வரையிலான காலத்தில் ‘லாயர்ஸ் கலெக்டிவ்' தொண்டு நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.32 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. அந்நியச் செலாவணி வரன்முறை சட்டத்தை மீறி நிதியுதவி பெறப்பட்டிருக்கிறது. இந்த நிதி, அரசியல் காரணங்களுக்காக செலவிடப்பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை குற்றம் சாட்டியுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பு, ‘லாயர்ஸ் கலெக்டிவ்' அமைப்புக்கு மறைமுகமாக நிதியுதவி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக 2016-ம் ஆண்டில் ஆனந்த் குரோவர், இந்திரா ஜெய்சிங்கிடம் மத்திய உள்துறை விளக்கம் கேட்டது. அவர்கள் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. இதன்காரணமாக கடந்த 2016 நவம்பரில் தொண்டு நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்த் குரோவர், இந்திரா ஜெய்சிங்கின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் என 11 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்

பற்றப்பட்டிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x