Published : 23 Aug 2017 09:48 AM
Last Updated : 23 Aug 2017 09:48 AM

காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

வடக்கு காஷ்மீர், குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நேற்று நடைபெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

குப்வாரா மாவட்டம், ஹண்டுவாரா பகுதியில் உள்ள ஹப்ருடா வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 2 அல்லது 3 தீவிரவாதிகள் அங்கு சிக்கியிருப்பதால் மோதல் நீடிப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு படைகளின் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. இதில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x