Published : 31 Aug 2017 09:28 AM
Last Updated : 31 Aug 2017 09:28 AM

உ.பி. சட்டமேலவை இடைத் தேர்தலில் ஆதித்யநாத் போட்டி

உத்தரபிரதேசத்தில் சட்டமேலவைக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுகின்றனர்.

உ.பி.யில் முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா, அமைச்சர்கள் சுதந்திர தேவ் சிங், மொசின் ராசா ஆகியோர் இரு அவைகளிலும் (சட்டப்பேரவை, சட்டமேலவை) உறுப்பினர்களாக இல்லை. இவர்கள் செப்டம்பர் 19-ம் தேதிக்குள் ஏதேனும் ஓர் அவையின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில் மேலவையில் காலியாக உள்ள 5 இடங்களுக்கு வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் இவர்கள் போட்டியிடுகின்றனர். சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்சிகள் பதவி விலகியதால் இந்தக் காலியிடம் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x