Published : 26 Aug 2017 02:35 PM
Last Updated : 26 Aug 2017 02:35 PM
ஹரியாணாவில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சிர்ஸா நகரில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் (50) குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சிர்ஸா, பஞ்ச்குலா ஆகிய நகரங்களில் வன்முறை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து இப்பகுதிகளில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிடிஐ வெளிட்ட செய்தியில், "சச்சா சவுதா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சிர்ஸா நகரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. சிர்ஸா நகரில் பல்வேறு இடங்களில் பால் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருவகின்றனர்.
பள்ளிகள், கல்லூரிகள், சினிமா திரையரங்குக, ஷப்பிங் மால்கள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். என்று கூறப்பட்டுள்ளது.
ராணுவம் மறுப்பு:
இதற்கிடையில் ஹரியாணாவில் சிர்ஸா நகரில் அமைந்துள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையகத்துக்குள் ராணுவத்தினர் சென்றுள்ளதாக வெளியான தகவலை இந்திய ராணுவம் தரப்பில் மறுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT