Published : 31 Jul 2017 03:54 PM
Last Updated : 31 Jul 2017 03:54 PM
பாஜக தேசியத் தலைவராக முழுமனதுடனும், மகிழ்ச்சியுடனும் பணியாற்றி வருவதால் அந்தப் பதவியை விட்டுவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாஜக தேசியத் தலைவர் என்ற கட்சிப் பதவியை அவர் துறந்து விடலாம் என்ற ஐயங்களுக்கும், செய்திகளுக்கும் அமித் ஷா முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும் பாஜக பிஹாரில் எந்தக் கட்சியையும் உடைக்கவில்லை என்று மறுத்தார் அமித் ஷா.
“நிதிஷ் குமார்தான் ஊழலுடன் தொடர முடியாது என்று பதவியை ராஜினாமா செய்தார். நாம் அவரை தொடரச் செய்திருக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார் அமித் ஷா.
லக்னோ வந்திருந்த அமித் ஷா 3 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
அதே போல் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டால் பாஜக தலைவர் பதவியை உதறுவீர்களா என்ற கேள்விக்குப் பதில் அளித்தபோது, “அந்தக் கேள்விக்கே இடமில்லை. கட்சித் தலைவராக எனக்கு பொறுப்புகள் இருக்கிறது. நான்மகிழ்வுடனும் மனப்பூர்வமாகவும் இந்தப் பணியைச் செய்து வருகிறேன். ஊடகங்கள் இப்படியெல்லாம் யோசிக்க வேண்டாமே” என்றார்.
மேலும், “மோடியின் நல்லாட்சியினால் 2019-ல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம்” என்றார் அமித் ஷா.
முந்தைய மன்மோகன் சிங் அரசு ‘கொள்கை முடக்குவாதம்’ கொண்டது என்று சாடிய ஷா, “ஒவ்வொருவருமே தங்களை பிரதமராக வரிந்து கொண்டனர், மன்மோகனை ஒருவரும் பிரதமராகக் கருதவில்லை” என்றார்.
10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. ஆனால் மோடியின் ஆட்சியில் இந்த 3 ஆண்டுகளில் ஒரு ஊழலையும் சுட்டிக்காட்ட முடியாது.
காங்கிரஸ் கட்சி தங்கள் எம்.எல்.ஏ.க்களை ஏன் பெங்களூருவில் பூட்டிய அறையில் வைத்துள்ளது? நீங்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு கூறினார் அமித் ஷா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT