Last Updated : 13 Jul, 2017 09:48 AM

 

Published : 13 Jul 2017 09:48 AM
Last Updated : 13 Jul 2017 09:48 AM

குரு பூர்ணிமாவை முன்னிட்டு: ஷீரடிக்கு பக்தர்கள் ரூ.5.52 கோடி நன்கொடை

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசாய்பாபா ஷன்ஸ்தான் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி ரூபால் அகர்வால் கூறியதாவது:

குரு பூர்ணிமா விழாவை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சாய்பாபா கோயிலுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிந்தனர். இவர்களில் வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் பணமாக ரூ. 2.94 கோடியும், கோயிலில் உள்ள நன்கொடை வசூல் மையங்கள் மூலம் பணமாக ரூ.1.40 கோடியும் பெறப்பட்டது.

மேலும் ஆன்-லைன், டெபிட் கார்டு, காசோலை, வரைவோலை மூலமும் பக்தர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர். மொத்தம் ரூ.5.52 கோடி நன்கொடை கிடைத் துள்ளது. இது கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ. 1.40 கோடி அதிகம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x