Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM
ஹரியாணா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் ஒரே ஒரு பெண் மட்டும் இடம் பிடித்துள்ளார்.
இக்கட்சி மொத்தம் உள்ள 10 மக்களவைத் தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஹிசார் மக்களவைத் தொகுதியில் அஜய் சவுதாலாவின் மூத்த மகன் துஷ்யந் (26) போட்டியிடுகிறார். இக்கட்சியின் சார்பில் போட்டியிடும் 40 வயதுக்குட்பட்ட வேட்பாளர் இவர் மட்டும்தான்.
கட்சியின் செயலாளர் அஷோக் ஷெர்வாலின் மனைவி குசும் பாலா (44) அம்பாலா (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். முக்கியத் தலைவர்களான சவுதாலாவும் அவரது மகன் அஜய் சிங் சவுதாலாவும் சிறையில் உள்ள நிலையில், அக்கட்சி மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ளது. கடந்த 1999-2000-ல் ஆசிரியர் நிய மனத்தில் ஊழல் நடைபெற்றது தொடர்பான வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் கடந்த ஆண்டு இருவருக்கும் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT