Published : 09 Jun 2017 09:58 AM
Last Updated : 09 Jun 2017 09:58 AM
உத்தரபிரதேசத்தில் ‘ராஷ்ட்ரிய கிசான் மஞ்ச்’ அமைப்பின் தலைவர் சேகர் தீட்சித் நேற்று கூறியதாவது:-
கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை பெரும்பாலான விவசாயிகள் பெறமுடியவில்லை.
இதுவே அடிப்படை பிரச்சினை யாகும். இதுதான் விவசாயிகளை வறுமையில் தள்ளுகிறது. விவசாயம் தொடர்பான முடிவு களை குளிர்சாதனை அறைகளில் அமர்ந்துகொண்டு எடுத்தால் விவசாயிகளுக்கு பலன் அளிக்காது. விவசாயிகளின் பிரச்சினைகளை அரசு விரைவாக தீர்க்க வேண்டும். இல்லாவிடில் ம.பி.யில் நடந்தது போன்ற சூழலை எதிர்கொள்ள தயாராக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT