Last Updated : 15 Sep, 2016 03:38 PM

 

Published : 15 Sep 2016 03:38 PM
Last Updated : 15 Sep 2016 03:38 PM

உத்தரப் பிரதேசத்திலும் டெங்கு: 250 போலீஸார் உட்பட 769 பேர் பாதிப்பு

டெல்லியைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கான்பூரில் 250 போலீஸார் உட்பட சுமார் 769 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் தினசரி சுமார் 100பேர் டெங்குவிற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், ஆனால் சுகாதாரத்துறை அமைச்சக நிர்வாகமோ வழக்கம் போல், “பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை. டெங்கு பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன மக்கள் பீதியடைய வேண்டாம்” என்று கூறியுள்ளது.

உ.பி. சுகாதாரத் துறையின் தரவுகளின் படி சுமார் 2,026 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதில், 250 போலீஸார் உட்பட 769 பேருக்கு டெங்கு வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. 697 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கான்பூரில் 250 போலீஸார் டெங்குவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செப்.22-ம் தேதி இந்தியா-நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் கிரீன் பார்க் மைதான பாதுகாப்பு பணிகளுக்கான தயாரிப்புகளில் இந்த போலீஸார் ஈடுபட்டிருந்த நிலையில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x