Last Updated : 20 Jan, 2016 08:56 AM

 

Published : 20 Jan 2016 08:56 AM
Last Updated : 20 Jan 2016 08:56 AM

முஸாபர்நகர் கலவரம்: பாஜக எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர் நகர் கலவரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ சங்கீத் சோமுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து நேற்று அவர் நீதிமன்றத் தில் சரணடைந்தார்.

முஸாபர்நகரில் கடந்த 2013 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத் தில் நிகழ்ந்த கலவரத்தில் 60 பேர் உயிரிழந்தனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேறு பகுதிக்கு புலம்பெயர்ந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மீது வழக்கு தொடரப் பட்டது. விசாரணையில் முஸாபர் நகரில் நடந்த மகாபஞ்சாயத்து கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் உட்பட 6 பேர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தெரியவந்தது. சங்கீத் சோமுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, நீதி மன்றம் சார்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் ஜாமின் கோரி ரூ.20 ஆயிரம் மதிப்பிலான உத்தர வாத பத்திரத்தை தாக்கல் செய் தார். அதன் அடிப்படையில் அவ ருக்கு கூடுதல் தலைமை மாஜிஸ் திரேட் நீதிபதி சீதாராம் ஜாமீன் வழங்கினார். அத்துடன் இவ்வழக் கின் அடுத்த விசாரணையை வரும் 23-ம் தேதி ஒத்திவைத்து, அன்று சங்கீத் சோம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஏற்கெனவே இவ்வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் சஞ்ஜீவ் பலியன், பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா, பாஜக எம்பி பர்தேந்து சிங் ஆகியோர் நீதிமன்றத் தில் சரணடைந்து ஜாமீனில் விடு தலையாகினர் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x