Published : 18 Aug 2016 10:28 AM
Last Updated : 18 Aug 2016 10:28 AM

ஆந்திராவில் பட்டாசு ஆலை தீயில் 4 பேர் பலி

தீபாவளி பண்டிகை நெருங்குவதை யொட்டி ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் மாவட்டம் தேவரபல்லி மண்டலம் ஏ.கொத்தபல்லி என்ற கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம், இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். எனினும் தீயில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார்.

விபத்து குறித்து தேவரபல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x