Last Updated : 03 Jan, 2017 12:46 PM

 

Published : 03 Jan 2017 12:46 PM
Last Updated : 03 Jan 2017 12:46 PM

காஷ்மீர் என்கவுன்ட்டரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய என்கவுன்ட்டர் தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோபூர் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றது.

காஷ்மீரின் சோபூர் பகுதியின் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவியதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் பதுங்கி இருந்து என்கவுன்ட்டர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தீவிரவாதிகள் தாக்குதலை நடத்த ஆரம்பிக்க, இந்திய தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x