Published : 03 Jul 2016 10:34 AM
Last Updated : 03 Jul 2016 10:34 AM
திருமலையில் சிறுத்தை நடமாட்டத்தைத் தொடர்ந்து நேற்று 10 அடி நீள பாம்பு தென்பட்டதால் பக்தர்கள் பீதி அடைந்துள்ளனர்.
திருமலையில் கடந்த 10 நாட்களாக பக்தர்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைகள் நாட மாட்டம் காணப்படுவதால் பக்தர் கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று திரு மலையில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் 10 அடி நீள பாம்பு தென்பட்டது. இதைக் கண்ட பக்தர்கள், உள்ளூர்வாசிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதேபோல அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையிலும் 7 அடி நீள நாகப் பாம்பைக் கண்டு பக்தர்கள் பீதி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடன டியாக வன ஊழியர் ஒருவர் வந்து பாம்புகளை பிடித்துச் சென்று அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT