Last Updated : 20 Oct, 2014 02:47 PM

 

Published : 20 Oct 2014 02:47 PM
Last Updated : 20 Oct 2014 02:47 PM

எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியர் கைது

காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் நாட்டவர் ராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அமைந்திருக்கும் கிருஷ்ணாகதி அருகே பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அத்துமீறி இந்திய எல்லையில் நுழைந்தார்.

அவரை கண்காணித்த ராணுவ அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவரிடமிருந்து பாகிஸ்தான் நாட்டு கரென்சிகளையும் போதை மருந்து அடங்கிய பையும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து அவரை கைது செய்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x