Published : 15 Mar 2017 08:35 PM
Last Updated : 15 Mar 2017 08:35 PM
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் 2% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வினால் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுகிறார்கள்.
அதே போல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கவும், திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஐஐடி திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததோடு, பொதுத்துறை, தனியார் பங்களிப்புடன் ஐஐடி நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் 50 கேந்திரிய வித்யாலயா அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT