Last Updated : 20 Jan, 2016 08:52 AM

 

Published : 20 Jan 2016 08:52 AM
Last Updated : 20 Jan 2016 08:52 AM

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் பிரிட்டன் இடைத்தரகருக்கு மீண்டும் வாரன்ட் பிறப்பித்தது இன்டர்போல்

ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்வதற்கான பேரத்தில், இடைத்தரகராக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிட்டன் வாசிக்கு இன்டர்போல் மீண்டும் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்களை வாங்குவதற் காக, இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்டுடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

ரூ.3,600 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள், மத்திய அரசு அதி காரிகளுக்கு ரூ.360 கோடி லஞ்சம் தரப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது

சிபிஐ-யின் முதல் தகவல் அறிக் கையில் விமானப் படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி 3 இடைத்தரகர்கள் உட்பட மொத்தம் 13 தனி நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் சிபிஐ கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த விவ காரத்தில் இடைத்தரகராக செயல் பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸுக்கு இன்டர் போல் அமைப்பு ஏற்கெனவே கைது வாரன்ட் பிறப்பித்திருந்தது.

இப்போது, அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜேம்ஸுக்கு எதிராக மீண்டும் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளதாக இன்டர்போல் அமைப்பின் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாட்டு அரசின் சார்பில் வாரன்ட்டை இன்டர்போல் பிறப்பிக் கும். சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என்று மற்ற நாடுகளுக்கு விடுக்கப்படும் கோரிக்கைதான் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x