Published : 06 Aug 2016 07:44 AM
Last Updated : 06 Aug 2016 07:44 AM
பெங்களூருவில் உள்ள லால் பாக் பூங்காவில் சுதந்திர தின மலர்க் கண்காட்சி இன்று தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் பூக்கும் மலர்கள் இடம் பெறுகின்றன.
இதுதொடர்பாக பெங்களூரு வில் கர்நாடக தோட்டக்கலைத் துறை இயக்குநர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மைசூருவை ஆண்ட ஹைதர் அலி 1760-ல் பெங்களூருவில் லால் பாக் பூங்காவை நிறுவினார். அவரது மகன் திப்பு சுல்தான் லால் பாக் பூங்காவை விரிவுபடுத்தி, கண்ணாடி குடில் அமைத்தார். இதில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, குளிர்காலத்திலும், கோடை காலத்திலும் மலர்க் கண் காட்சிகள் நடத்தப்பட்டன. மைசூரு தோட்டக்கலை சங்கம் சார்பில் 1951-ம் ஆண்டில் இருந்து சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினத்தின்போது மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது.
204-வது ஆண்டாக நடைபெறும் இந்த மலர்க் கண்காட்சி சனிக் கிழமை (இன்று) தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடை பெறும். இதில் இந்தியாவை சேர்ந்த மலர்கள் மட்டுமின்றி அமெரிக்கா, தாய்லாந்து, ஹவாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பூக்கும் அழகான மலர்களும், காய்கனி களும் இடம்பெறும். ஊட்டியில் உள்ள ஃபெர்ன்ஹில்ஸ் தோட்டத் தின் சார்பில் பசுமை எரிசக்தியை பிரதிபலிக்கும் மித வெப்ப தோட்ட மலர்களும் இந்த கண்காட்சியில் இடம்பெறுகின்றன''என்றார்.
கர்நாடகா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இந்த மலர்க் கண்காட்சிக்கு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT