Published : 22 Sep 2016 10:37 AM
Last Updated : 22 Sep 2016 10:37 AM
விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை 20 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
கடந்த மாதம், நாட்டின் 70-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, விடுதலைப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றார்.
இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “விடுதலைப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு ஓய் வூதியம் 20 சதவீதம் உயர்த்தப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார். இது தொடர்பான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.
விடுதலைப் போராட்டத் தியாகி கள் தற்போது ரூ.25,000 ஓய்வூதியம் பெறுகின்றனர். இனி அவர்கள் ரூ.30,000 பெறுவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT