Published : 29 Jan 2017 08:48 AM
Last Updated : 29 Jan 2017 08:48 AM

திருமலையில் பலத்த மழை

திருமலையில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது. இதனால் கோயில் முன் மழைநீர் வெள்ளம் போல் காட்சியளித்தது.

திருப்பதி மற்றும் திருமலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோயில் முகப்பு கோபுரம் முன் மழைநீர் வெள்ளம் போல் காட்சியளித்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கபில தீர்த்தத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. திருப்பதியிலும் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அதிக மழை காரணமாக திருமலையில் பக்தர்களின் கூட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது.

திருப்பதி ஏழுமலையானை நேற்று காலை விஐபி பிரேக் சமயத்தில் கர்நாடக மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x