Last Updated : 06 Oct, 2014 11:05 AM

 

Published : 06 Oct 2014 11:05 AM
Last Updated : 06 Oct 2014 11:05 AM

காசியாபாத் அருகே லக்னோ மெயில் தடம் புரண்டு விபத்து

திங்கள்கிழமை காலை உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் அருகே லக்னோ மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ரயிலின் ஏ.சி. பெட்டிகள் 3 தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.விபத்து காரணமாக அந்த வழியாக செல்லும் ரயில்கள் சில மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டன.

ரயில் விபத்து குறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் நீரஜ் சர்மா கூறியதாவது: "காலை 6.20 மணிக்கு ரயில் காசியாபாத் வந்தடைந்தது. இன்ஜினில் இருந்து 7-வதாக இணைக்கப்பட்டிருந்த பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியது. தொடர்ந்து 2 பெட்டிகள் தடம் புரண்டன. தடம்புரண்ட மூன்று பெட்டிகளும் ரயிலில் இருந்து நீக்கப்பட்டு ரயில் டெல்லி புறப்பட்டுச் சென்றது. விபத்தில் உயிர் சேதம் எதுவுமில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x