Published : 26 Apr 2017 09:31 AM
Last Updated : 26 Apr 2017 09:31 AM
நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது சிபிஐ அதிகாரிகள் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரை சிபிஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா பணியாற்றினார். அப்போது நிலக்கரி ஊழல் வழக்கில் தொடர்புடைய அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை அவர் தனியாக சந்தித்துப் பேசியதாகவும் அவர்களுக்கு சாதகமாக வழக்குகளை இழுத்தடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுபடி நீதிபதி மதன் பி லோகுர் தலைமையில் 3 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. இதில் ரஞ்சித் சின்ஹா மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT