Published : 14 Nov 2013 11:42 AM
Last Updated : 14 Nov 2013 11:42 AM

பா.ஜ.க.-வில் இணைந்தார் மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.பி

மத்தியப் பிரதேசத்தில், சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஹோஸங்காபாத் காங்கிரஸ் எம்.பி. உதய்பிரதாப் சிங், பா.ஜ.க.-வில் இணைந்துள்ளார்.

அவரது இந்த நடவடிக்கையால், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2003- சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்தியப் பிரதேசம் பா.ஜ.க. கோட்டையாகி விட்டது.

நவம்பர் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ம.பி-யை தன் ஆதிக்கத்துகுள் கொண்டு வர காங்கிரஸ் கடும் பிரயத்தனம் செய்து வரும் வேளையில், ஹோஸங்காபாத் காங்கிரஸ் எம்.பி. உதய்பிரதாப் சிங், பா.ஜ.க.-வில் இணைந்துள்ளார்.

இதன் மூலம், ம.பி. மாநிலத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றுவது சாத்தியப்படும் எனவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x