Published : 21 Jun 2016 03:09 PM
Last Updated : 21 Jun 2016 03:09 PM

யோகா பயிற்சியை வாழ்க்கையின் அங்கமாக மாற்றுங்கள்: பிரணாப் முகர்ஜி

யோகா பயிற்சியை வாழ்க்கையின் அங்கமாக மாற்றுங்கள் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.

இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தை பிரணாப் முகர்ஜி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டனர்.

அப்போது பிரணாப் பேசுகையில், ''யோகா பயிற்சி ஒருவருக்கு மன வலிமையையும் உடல் வலிமையும் அளிக்கும். அதனால் யோகா பயிற்சியை பின்பற்றுபவர்கள் வளமாக வாழமுடியும்.

இது ஒருவரது உடல் மற்றும் மனத்தினை ஒன்றிணைக்கும்.யோகா பயிற்சியை வாழ்க்கையின் அங்கமாக மாற்றுங்கள்'' என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x