Published : 20 Sep 2018 08:40 AM
Last Updated : 20 Sep 2018 08:40 AM
உலக சுகாதார நிறுவனத்தின், ‘உலகளாவிய காசநோய் அறிக்கை- 2018’ கடந்த செவ்வாய்க் கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
உலகளவில் காசநோய் (டிபி) அதிக பாதிப்புள்ள 30 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நாடு களில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கோடி பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 58 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் 32 லட்சம் பெண்கள், 10 லட்சம் குழந்தைகளும் அடங்குவர்.
இந்தியாவில் மட்டும் கடந்த 2017-ம் ஆண்டு 27 சதவீதம் பேர் (27 லட்சம் பேர்) இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கூறிய 30 நாடுகளில் இந்தியாவில்தான் காசநோய் பாதிப்பு அதிகம் உள்ளது. மேலும், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கோடி பேரில் மூன்றில் 2 பங்கு மக்கள் 8 நாடுகளில் மட்டுமே உள்ளனர்.
ஒரு கோடி பேரில் இந்தியா 27 சதவீதம், சீனா 9, இந்தோ னேசியா 8, பிலிப்பைன்ஸ் 6, பாகிஸ் தான் 5, நைஜீரியா, வங்கதேசம் தலா 4 மற்றும் தென் ஆப்பிரிக்கா வில் 3 சதவீதம் மக்கள் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள னர். ஐரோப்பிய நாடுகளில் 6 சதவீதம் பேருக்கு மட்டுமே இந் நோய் பாதிப்புள்ளது. அமெரிக்கா வில் 3 சதவீதம் பேர் பாதிக்கப்பட் டுள்ளனர்.
உலகளவில் தினமும் காச நோயால் 4000 பேர் இறக்கின்றனர். இவ்வாறு உலக சுகாதார நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT