Last Updated : 20 Sep, 2018 08:40 AM

 

Published : 20 Sep 2018 08:40 AM
Last Updated : 20 Sep 2018 08:40 AM

இந்தியாவில் கடந்த ஆண்டு 27 லட்சம் பேர் காசநோயால் பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்

உலக சுகாதார நிறுவனத்தின், ‘உலகளாவிய காசநோய் அறிக்கை- 2018’ கடந்த செவ்வாய்க் கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

உலகளவில் காசநோய் (டிபி) அதிக பாதிப்புள்ள 30 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நாடு களில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கோடி பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 58 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் 32 லட்சம் பெண்கள், 10 லட்சம் குழந்தைகளும் அடங்குவர்.

இந்தியாவில் மட்டும் கடந்த 2017-ம் ஆண்டு 27 சதவீதம் பேர் (27 லட்சம் பேர்) இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கூறிய 30 நாடுகளில் இந்தியாவில்தான் காசநோய் பாதிப்பு அதிகம் உள்ளது. மேலும், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கோடி பேரில் மூன்றில் 2 பங்கு மக்கள் 8 நாடுகளில் மட்டுமே உள்ளனர்.

ஒரு கோடி பேரில் இந்தியா 27 சதவீதம், சீனா 9, இந்தோ னேசியா 8, பிலிப்பைன்ஸ் 6, பாகிஸ் தான் 5, நைஜீரியா, வங்கதேசம் தலா 4 மற்றும் தென் ஆப்பிரிக்கா வில் 3 சதவீதம் மக்கள் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள னர். ஐரோப்பிய நாடுகளில் 6 சதவீதம் பேருக்கு மட்டுமே இந் நோய் பாதிப்புள்ளது. அமெரிக்கா வில் 3 சதவீதம் பேர் பாதிக்கப்பட் டுள்ளனர்.

உலகளவில் தினமும் காச நோயால் 4000 பேர் இறக்கின்றனர். இவ்வாறு உலக சுகாதார நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x