Last Updated : 29 Sep, 2014 04:23 PM

 

Published : 29 Sep 2014 04:23 PM
Last Updated : 29 Sep 2014 04:23 PM

உம்மன் சாண்டிக்கும் ஜெயலலிதா நிலைதான்: அச்சுதானந்தன்

கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீதான வழக்கு விசாரணைகள் முடிவடைந்தால், அவருக்கும் ஜெயலலிதாவின் நிலைதான் ஏற்படும் என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், "பாமாயில் இறக்குமதி, டைட்டானியம் தொழிற்சாலை பணி ஊழல் மற்றும் சூரிய சக்தி தகடுகள் விற்பனை ஊழல் ஆகியவற்றில் சாண்டி மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த வழக்குகள் அனைத்தும் முறையாக நடைபெற்றால், 18 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெற்றுள்ளது போன்ற நிலை தான் அவருக்கும் ஏற்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x