Published : 26 Jun 2019 09:11 AM
Last Updated : 26 Jun 2019 09:11 AM

ஜூலை 16-ல் சந்திர கிரகணம்: ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் சாத்தப்படும்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் ஜூலை 16-ம் தேதி ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் சாத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வரும் ஜூலை 17-ம் தேதி அதிகாலை 1.31 மணி முதல் 4.29 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதனையொட்டி, திரு மலையில் உள்ள ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் சாத்தப்பட உள்ளதாக தேவஸ் தானம் அறிவித்துள்ளது. வரும் ஜூலை 16-ம் தேதி இரவு 7 மணி முதல் 17-ம் தேதி அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம் கோயில் நடை சாத்தப்பட உள்ளது. இதன்பிறகு கோயில் நடை சுத்தப்படுத்தப்பட்டு 17-ம் தேதி மதியம் 11 மணிக்கு பிறகு சுவாமியை வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஜூலை 17-ம் தேதி ஆனி வாரம் ஆஸ்தானம் நடைபெற உள்ளதை யொட்டி, முந்தைய நாள் 16-ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால், 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பல்வேறு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x