Published : 26 Jun 2019 09:11 AM
Last Updated : 26 Jun 2019 09:11 AM
சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் ஜூலை 16-ம் தேதி ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் சாத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வரும் ஜூலை 17-ம் தேதி அதிகாலை 1.31 மணி முதல் 4.29 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதனையொட்டி, திரு மலையில் உள்ள ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் சாத்தப்பட உள்ளதாக தேவஸ் தானம் அறிவித்துள்ளது. வரும் ஜூலை 16-ம் தேதி இரவு 7 மணி முதல் 17-ம் தேதி அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம் கோயில் நடை சாத்தப்பட உள்ளது. இதன்பிறகு கோயில் நடை சுத்தப்படுத்தப்பட்டு 17-ம் தேதி மதியம் 11 மணிக்கு பிறகு சுவாமியை வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஜூலை 17-ம் தேதி ஆனி வாரம் ஆஸ்தானம் நடைபெற உள்ளதை யொட்டி, முந்தைய நாள் 16-ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால், 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பல்வேறு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT