Last Updated : 06 Mar, 2018 05:17 PM

 

Published : 06 Mar 2018 05:17 PM
Last Updated : 06 Mar 2018 05:17 PM

லெனின் ஒரு தீவிரவாதி- சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து

 திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி வரும் நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, லெனின் ஒரு தீவிரவாதி என கூறியுள்ளார்.

திரிபுராவில் பெலோனியா கல்லூரி சதுக்கத்திலுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் வைக்கப்பட்ட புரட்சியாளர் லெனின் சிலையை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பாஜக ஆதரவாளர்கள் அகற்றினர்.

இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பாஜகவினருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் லெனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''லெனின் வெளிநாட்டுக்காரர்! அவர் ஒருவர் தீவிரவாதி. நம் நாட்டில் அவரது சிலையை ஏன் வைக்க வேண்டும்? கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுக்கு விருப்பம் என்றால், தங்களது கட்சி அலுவலகங்களில் லெனின் சிலையை வைத்து வழிபாடு நடத்தட்டும்'' எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x