Published : 13 Apr 2019 01:25 PM
Last Updated : 13 Apr 2019 01:25 PM
எங்கள் இருமகன்களை பிரிக்க சதி நடக்கிறது, பிரிந்து சென்ற மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் விரைவில் விடு திரும்புவார் என ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி கூறியுள்ளார்.
லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவும் இளைய மகன் தேஜஸ்வி யாதவும் கடந்த 2013-ம்ஆண்டில் அரசியலில் கால் பதித்தனர். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்,
அப்போது ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகப் பதவியேற்றார். லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் மூத்த மகன் தேஜ் பிரதாப் சுகாதாரத் துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். அப்போதே அண்ணன், தம்பி இடையே மோதல் ஏற்பட்டது.
இளைய மகன் தேஜஸ்வி யாதவை தனது அரசியல் வாரிசாக லாலு முன்னிறுத்தி வருகிறார். இதனால் அண்ணன், தம்பி உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. மக்களவைத் தேர்தலில்
சரண் தொகுதி லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவின் மாமனாரான சந்திரிகா ராய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராயை மணமுடித்த தேஜ் பிரதாப், அடுத்த ஐந்து மாதங்களில் அவரிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளார்.
இந்தசூழலில் தங்கள் குடும்ப தொகுதி மாமனாருக்கு ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த தேஜ் பிரதாப் அவரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும் ஆர்ஜேடி மாணவர் அணி பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதனால் லாலு மகன்களிடையே உச்சபட்ச மோதல் நடந்து வருகிறது.
இந்தநிலையில் இதுபற்றி லாலு பிரசாத்தின் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:
எனது கணவர் மீது திட்டமிட்டு பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி விட்டனர். தற்போது எங்கள் குடும்பத்துக்குள் குழப்பம் விளைவிக்க எதிர்க்கட்சிகள் முயலுகின்றன. தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி இருவருமே எங்களுக்கு முக்கியம். இருவரும் சமமானவர்கள்.
எனது கணவரும், நானும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். ஆனால் தற்போது எதிர்க்கட்சிகள் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டையை மூட்டி விடுகின்றன. அவர்களின் சதித்திட்டம் நிறைவேறாது. போது மகனே தேஜ் பிரதாப். நீ வீட்டுக்கு திரும்பி விடு’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT