Published : 04 Apr 2019 03:21 PM
Last Updated : 04 Apr 2019 03:21 PM
தேர்தலுக்குப் பிறகாவது தேர்தல் அறிக்கை வெளியிடும் அந்த 'அச்சே தின்' வருமா? என்று அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் பாஜகவைக் கிண்டலடித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் இன்னும்கூட நாட்டின் பிரதான கட்சியான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் உள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பாஜகவைக் கிண்டலடித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் ட்விட்டரில், ''பிரதமரின் தேர்தல் அறிக்கை வெளிவரும் அந்த நல்ல நாள் (அச்சே தின்) தேர்தல் முடிந்த பிறகாவது வருமா? என்று விகாஸ் (வளர்ச்சி) கேட்கிறது. இந்த நேரம் வரையில்கூட பாஜக ஆதரவாளர்களால் 'அச்சே தின்' எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாத நிலைதான் தொடர்கிறது. அப்படியிருக்க, மக்கள் எப்படி அதைச் சொல்வார்கள். பாஜகவுக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது'' என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பதிவோடு #VikasPoochhRahaHai என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT