Published : 13 Apr 2019 03:45 PM
Last Updated : 13 Apr 2019 03:45 PM
பிரதமர் மோடி இடும் உத்தரவுக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் செயல்படுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகார் தெரிவித்துள்ளார்.
முதல்கட்ட மக்களவைத் தேர்தல் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுடன், அம்மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
தேர்தலில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என புகார் கூறப்பட்டது.
150 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை அவர் இன்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியளர்களிடம் இதுபற்றி கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது ஏற்கெனவே புகார் கூறியிருந்தோம். தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பு. ஆனால், பிரதமர் மோடியின் அறிவுரைப்படி செயலாற்றுகிறது. மற்ற கட்சிகளின் புகாரை தேர்தல் ஆணையம் கேட்பதில்லை. ஆந்திராவில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது அநீதி.
இவ்வாறு சந்திரபாபு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT