Published : 01 Mar 2019 12:19 PM
Last Updated : 01 Mar 2019 12:19 PM
அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவதை தொடர்ந்து அவரை காண டெல்லி சென்ற அவரது பெற்றோரை விமானத்தில் பொதுமக்கள் கைதட்டி வரவேற்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்திய விமானி அபிநந்தன் இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்படுகிறார் என்று அறிவித்தத்தை தொடர்ந்து அபிநந்தனின் பெற்றோர் டெல்லிக்கு புறப்பட அதிகாலை சென்னை விமானம் நிலையம் வந்தனர்.
அப்போது விமானத்திற்குள் நுழைந்த அபிநந்தனின் தாய் மற்றும் அவரது தந்தை வர்தமானை விமானதிலிருந்து பயணிகள் கை தட்டி வரவேற்றனர்.
இதனைக் கண்ட அபி நந்ததின் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அபிநந்தனின் தந்தை செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘நான் முதலின் என் மகனைப் பார்க்க ஆசைப்படுகிறேன்” என்று கூறினார்
பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்துடன் அபிநந்தன் சண்டையிட்டபோது, எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளாகி பாகிஸ்தான் பகுதியில் விழுந்துள்ளது. இதையடுத்து அவரை பாகிஸ்தான் ராணுவம் பிடித்து வைத்திருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அமைதி, நல்லெண்ணம் கருதி அவரை இன்று விடுவிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT