Last Updated : 28 Feb, 2019 12:42 PM

 

Published : 28 Feb 2019 12:42 PM
Last Updated : 28 Feb 2019 12:42 PM

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்: இந்தியா பதிலடி

எல்லையில் இன்று பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

 

போர்ப்பதற்றமான இந்தச் சூழ்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய எல்லைக் கட்டுப்பாடு நிலையை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

 

பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய தரப்பும் தக்க பதில் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய தரப்பில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 

கிருஷ்ண காதி செக்டரில் காலை 6 மணிக்குத் தொடங்கிய துப்பாக்கிச் சூடு, 7 மணி வரை நீடித்துள்ளது.

 

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான சூழலில் இந்தத் தாக்குதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x