Last Updated : 10 Feb, 2019 06:04 PM

 

Published : 10 Feb 2019 06:04 PM
Last Updated : 10 Feb 2019 06:04 PM

காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினரால் 5 தீவிரவாதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து மாநில ஐஜி எஸ்.பி. பாணி தெரிவிக்கையில், ''கெல்லாம் ட்வாசார் பகுதிக்கு பாதுகாப்புப் படைகள் சென்றன. அங்கு இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சண்டையின்போது 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் வெடிபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன'' என்றார்.

இச்சண்டையில் வேறெந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்த எதிரிகளின் பாசறையும் அழிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து தீவிரவாதிகளின் சடலங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் மக்கள் சிலர் கல்லெறி சம்பவத்தில் ஈடுபட்டதால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நால்வருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யாரென்று அடையாளம் காணப்படும் பணிகள் மேலும் தொடரும் நிலையில் தேடுதல் நடவடிக்கை இன்னும் தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x