Published : 26 Feb 2019 09:16 AM
Last Updated : 26 Feb 2019 09:16 AM

ஒரு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிமாற்ற முறையில் ரூ.2,021 கோடி செலுத்தப்பட்டு சாதனை

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.75,000 கோடியில் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின்படி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6,000 வழங்கப்படவுள்ளது. ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக இந்தத் தொகை வழங்கப்படும்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 1.01 கோடிவிவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் முதல் தவணைத்தொகை ரூ.2,000, நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கு இத்தொகை விரைவில் இது செலுத்தப்படவுள்ளது.

1,010,6,880 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ.2,021 கோடி தொகை செலுத்தப்பட்டது. மத்திய அரசின் பப்ளிக் பைனான்ஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்(பிஎப்எம்எஸ்), எம்ஐஎஸ் ஐடி சாப்ட்வேர், நிதியமைச்சகத்தின் பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளர் (சிஜிஏ) பிரிவு ஆகியவற்றின் உதவியுடன் இந்தத் தொகை வெற்றிகரமாக செலுத்தப்பட்டு சாதனை புரியப்பட்டுள்ளது.

பிஎப்எம்எஸ் மூலம் 273 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்தத் தொகை சென்று சேர்ந்துள்ளது. இதற்காக தனியாக அதிசக்திவாய்ந்த கம்ப்யூட்டர் சர்வர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சர்வரில் வங்கியில் கணக்கு வைத்துள்ள விவசாயப் பயனாளர்கள் மதிப்பீடு, பணத்தை வங்கிகளுக்கு செலுத்துதல், பின்னர் விவசாயிகளுக்கு பணம் சென்று சேர்தல் அனைத்தும் திறமையான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் 12 கோடி விவசாயிகள் பலன் அடையவுள்ளனர். இதுவரை மத்திய அரசின் சார்பில் இவ்வளவு பெரிய தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதே இல்லை. அந்த வகையில் இந்தத் தொகை பரிமாற்றம் வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x