Published : 27 Feb 2019 11:52 AM
Last Updated : 27 Feb 2019 11:52 AM
புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று (செவ்வாய்க்கிழமை) தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலுமாக அழித்தது.
பாலகோட் தாக்குதல் கடந்த 2016-ம் ஆண்டு, யூரி தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவத்தினர் நடத்திய துல்லியத் தாக்குதலை நினைவுபடுத்துகிறது.
இன்றைய சூழலில் இரண்டுக்குமான ஓர் ஒப்பீடு:
துல்லியத் தாக்குதல் 2016 | துல்லியத் தாக்குதல் 2019 | |
காரணம் | யூரி தீவிரவாதத் தாக்குதல் | புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் |
தாக்குதல் முறை | ராணுவ தளத்துக்குள் நுழைந்த 4 தீவிரவாதிகள் | காரில் வெடிகுண்டுகளுடன் தற்கொலைப்படை தீவிரவாதி மோதல் |
வீரர்கள் பலி | 19 ராணுவ வீரர்கள் | 40 சிஆர்பிஎப் வீரர்கள் |
பொறுப்பேற்றவர்கள் | விசாரணைக்குப் பிறகு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு என்று தெரிந்தது | ஜெய்ஷ்-இ-முகமது தானாகவேபொறுப்பேற்றது |
பதிலடி | 11 நாட்களில் | 12 நாட்களில் |
இந்திய தாக்குதல் | தரை வழித் துல்லியத் தாக்குதல் | வான்வழித் துல்லியத் தாக்குதல் |
பயன்படுத்தப்பட்ட படை | சிறப்பு துணை ராணுவப் படை | மிராஜ் 2000 போர் விமானங்கள் |
இலக்கு பகுதி | பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் | பாகிஸ்தான் |
பாகிஸ்தானின் எதிர்வினை | முழுமையான மறுப்பு | உள்ளே நுழைந்ததை ஒப்புக்கொண்டது; ஆனால் சேதம் ஏற்படவில்லை என்று கூறியது |
இந்திய அறிக்கை | எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே தீவிரவாதக் குழுக்கள் பதுங்கியிருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது. இதனால் அங்கு இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதலை நடத்தியது | நம்பகமான உளவுத்துறை தகவலின்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜெய்ஷ் இ முகமது தற்கொலைப்படைத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தது. இதற்காக ஏராளமான தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்துவது முக்கியமானதாக மாறியது.
இதனால் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT