Published : 25 Feb 2019 06:01 PM
Last Updated : 25 Feb 2019 06:01 PM

வேற்று சாதி இளைஞரை காதலித்த இளம்பெண் சுட்டுக்கொலை: சகோதரன் கைது

வேற்று சாதியைச் சேர்ந்தவரை காதலித்ததால் சொந்த தங்கையையே இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

முசாபர்நகரில் இன்று காலை இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்நிலைய தலைமை அதிகாரி சஞ்சீவ் குமார் தெரிவித்ததாவது:

தயானி (23) என்ற பெண்ணை அவரது சகோதரர் அபேஷ் குமார் (25) இன்று காலை சுட்டுக்கொன்றுள்ளார். தயானி வேறொரு சாதியைச் சேர்ந்தவரை காதலித்த  விவகாரம் வீட்டிற்கு தெரியவந்ததால் குடும்பத்தினர் ஆத்திரமடைந்ததாகத் தெரிகிறது.

இவ்விவகாரம் அவர்கள் குடும்பத்திற்கு தெரிய வந்த பிறகு இந்த காதல் ஜோடிகளை ஒரு ரெஸ்டாரெண்டில் வைத்து நான்கு இளைஞர்கள் தொல்லை கொடுத்ததாக இவர்கள் நான்கு நாட்களுக்கு முன் ஒரு புகாரையும் தந்துள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் அதேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக்குற்றத்திற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம்புரிந்தவரிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மற்றும் தயானியின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு சஞ்சீவ் குமார் தெரிவித்தார்.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x