Published : 05 Feb 2019 12:14 PM
Last Updated : 05 Feb 2019 12:14 PM
உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர் நகரில் உள்ள சத்தேலா கிராமத்தில் இரண்டும் மதத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஒருவர் கொல்லப்பட்டார்; 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய எஸ்பி அலோக் சர்மா, ''சத்தேலா கிராமத்தில் வசிப்பவர்கள் ராஜ்குமார் மற்று ஷவாய்ஸ். இருவரின் குழந்தைகளுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது.
இரண்டு பேரின் உறவினர்களும் குச்சிகளை வைத்துத் தாக்கிக் கொண்டனர். இதில் 6 பேர் காயமடைந்தனர். ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கலவரம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT