Published : 01 Jan 2019 11:01 AM
Last Updated : 01 Jan 2019 11:01 AM
புத்தாண்டான இன்று (ஜன. 1) திரிணமூல் காங்கிரஸ் கட்சி 21 வயதை எட்டியுள்ளதை அடுத்து, கட்சித் தொண்டர்களுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் தாய், தாய்நாடு மற்றும் மக்களுக்கும் மம்தா நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போதைய மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த ஜனவரி 1-ம் தேதி 1998-ல் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மம்தா, ''1998-ல் தொடங்கிய நமது பயணம் முழுவதும் போராட்டங்களால் நிறைந்தது. ஆனால் மக்களுக்காகப் போராடும் முடிவில் உறுதியாக நின்றோம்.
தாய், தாய்நாடு மற்றும் மக்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்காக ஆண்டின் 365 நாட்களும் கடுமையாகப் பணியாற்றும் தொண்டர்களுக்கு பெரிய வணக்கம். #Trinamool21'' என்று தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழாவை முன்னிட்டு செவ்வாய்க் கிழமை அன்று, ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்த திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்டத் தலைவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்ற நிகழ்ச்சிகள், தெருவோரக் கூட்டங்களை நடத்த உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT