Published : 12 Dec 2018 08:28 AM
Last Updated : 12 Dec 2018 08:28 AM
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. ஊழலுக்கு எதிராக போராடுவதாக அவர் கூறி வருகிறார். ஆனால் அவரே ஒரு ஊழல்வாதி என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். இது மாற்றத்துக்கான தருணம்.
ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் முன்பு பிரதமர் மோடியால் போரிட முடியாது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கொள்கைகள் ஒரே மாதிரியானவை. தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தியுள் ளோம். இந்த 3 மாநிலங்களிலும் நல்லாட்சி வழங்குவோம்.
மூன்று மாநில தேர்தல் வெற்றி தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக மக்க ளிடம் அதிருப்தி எழுந்தால் அதுகுறித்து விரிவாக விவாதிக் கப்பட வேண்டியது அவசியம். அமெரிக்கா உள்ளிட்ட நாடு களிலும் இந்த விவகாரம் விவா திக்கப்பட்டு வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் சிப்பில் மோசடி செய்தால் ஒட்டுமொத்த வாக்குப் பதிவு நடைமுறையிலும் பாதிப் புகள் ஏற்படலாம்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT