Last Updated : 29 Nov, 2018 09:07 AM

 

Published : 29 Nov 2018 09:07 AM
Last Updated : 29 Nov 2018 09:07 AM

ரஜினியின் 2.0 திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு: பெங்களூருவில் வாட்டாள் நாகராஜ் ஆர்ப்பாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட் டாள் நாகராஜ் பெங்களூருவில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத் தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங் களிலும், வெளிநாடுகளிலும் வெளி யாகிறது. கர்நாடகாவில் இந்த திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் பெங்களூருவில் உள்ள ஊர்வசி திரையரங்கம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னட சலுவளி கட்சியின் தலைவரும், கன்னட அமைப்பு கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளருமான வாட்டாள் நாகராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப் போது ரஜினிக்கு எதிராகவும், கர்நாடகாவில் ஆதிக்கம் செலுத் தும் பிறமொழி திரைப்படங்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப் பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு சென்ற‌ வாட்டாள் நாகராஜ், 2.0 திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என வலியுறுத்தி, மனு அளித்தார்.

அப்போது வாட்டாள் நாகராஜ் கூறும்போது, "கா்நாடகாவில் அண்மைக் காலமாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்கள் அதிகமாக திரையிடப்படுகின்றன. குறிப்பாக பெங்களூருவில் பிற மொழி படங் களின் தொல்லை அதிகமாக உள் ளது. இதனால் கன்னட திரைப்படங் களுக்கு போதிய அளவில் திரையரங்குகள் கிடைப்பதில்லை.

இப்போது ரஜினியின் 2.0 அதிக திரையரங்குகளில் வெளியாகப் போகிறது. இதனால் கன்னட திரைப்படங்கள் திரையிட திரையரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கன்னட தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் கன்னட திரைப் படங்கள் அதிகளவில் திரையிடப் படுவது இல்லை. இங்கு மட்டும் ஏன் பிறமொழி திரைப்படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும்? தேவைப்பட்டால் ஒரு மாதம் கழித்து திரையிட்டு கொள்ளட்டும்.

வியாழக்கிழமை வெளியாக உள்ள 2.0 திரைப்படத்தை கர் நாடகாவில் திரையிடக்கூடாது. எங் களது எதிர்ப்பை மீறி, அந்த திரைப் படத்தை திரையிடும் திரையரங் கின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத் துவோம்" என்றார். ரஜினிகாந்தின் முந்தைய படமான காலா வெளி யானபோது கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், பெரும்பாலான திரையரங்குகளில் அந்த திரைப்படம் முதல் நாள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x