Published : 21 Nov 2018 08:56 AM
Last Updated : 21 Nov 2018 08:56 AM

தெலங்கானா தேர்தலில் 32 வயது திருநங்கை போட்டி

தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் ’சந்திரமுகி’ எனும் 32 வயது திருநங்கை ஒருவர் போட்டியிடுகிறார்.

தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. தெலங்கானா மாநில தேர்தலில் முதன் முறையாக திருநங்கை ஒருவர் பாஜக- காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள் ளார்.

மார்க்ஸிஸ்ட்-பகுஜன் (இடது) கூட்டணி கட்சிகளில், பகுஜன் (இடது) கட்சி சார்பில் சந்திரமுகி (32) எனும் திருநங்கை, ஹைதராபாத்தில் உள்ள கோஷாமஹல் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x