Published : 01 Aug 2014 10:56 AM
Last Updated : 01 Aug 2014 10:56 AM
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தனியார் தொழில்ற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளர்கள் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தலைநகர் ராய்ப்பூரில் உர்லா எனும் கிராமத்தில் மின்சார பியூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர்.
தொழிற்சாலை மேலாளர் சம்பவம் நடந்த போது வெளியில் சென்றிருந்ததால் அவர் மட்டும் உயிர் தப்பினார்.
தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து தொழிலாளர்களின் சடலங்களை மீட்டனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருவதாக போலீஸ் எஸ்.பி. தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT