Published : 10 Oct 2018 08:29 AM
Last Updated : 10 Oct 2018 08:29 AM

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைதான இன்ஜினீயரிடம் காவலில் விசாரிக்க அனுமதி

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த பிரம்மோஸ் இன்ஜினீயர் நிஷாந்த் அகர்வாலை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நாக்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவு கணைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கி, போர்க்கப்பல், போர் விமானங்கள் மற்றும் தரையிலிருந்தும் ஏவ முடியும்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் செயல்படும் பிரம்மோஸ் ஏரோ ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பிரம்மோஸ் ஏவு கணை ஆராய்ச்சிகள் நடைபெறு கின்றன. இங்கு உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியை சேர்ந்த இன்ஜினீயர் நிஷாந்த் அகர்வால் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்காக அவர் வேவு பார்த்திருப்பதும் பிரம்மோஸ் குறித்த ரகசிய தகவல்களை பரிமாற்றம் செய்திருப்பதும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து உத்தர பிரதேச, மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நாக்பூரில் நேற்று முன்தினம் நிஷாந்த் அகர்வாலை கைது செய்தனர். நாக்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

பேஸ்புக்கில் ஆபாச வீடியோக் கள் மூலம் நிஷாந்த் அகர்வாலை கவர்ந்திழுத்த ஐஎஸ்ஐ அமைப்பு, அவரை தங்கள் வலைக்குள் விழவைத்து வேவு பணிக்கு பயன் படுத்தியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது. கடந்த 2017-18-ம் ஆண்டில் சிறந்த இளம் விஞ்ஞானி விருதை நிஷாந்த் அகர்வால் பெற்றுள்ளார். கடந்த மார்ச்சில் அவருக்கு திருமணம் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x