Published : 28 Oct 2018 04:47 PM
Last Updated : 28 Oct 2018 04:47 PM
பிரதமர் மோடியை கட்டுப்படுத்த முடியாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பு திணறுகிறது, சிவலிங்கத்தின் மீது அமர்ந்து இருக்கும் தேள் போல அவர் இருக்கிறார் என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார்.
பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
‘‘பொதுவாகவே ஆர்எஸ்எஸ் பின்பற்றி வரும் நடைமுறைகளிலும் இருந்த முற்றிலும் மாறுபட்டவர். அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் எனக்கூறினாலும் அவரது செயல்பாடு வேறுபட்டுள்ளது. அவரை பற்றி ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் சில தகவல்கள் கூறினார்.
அதன்படி பார்த்தால் பிரதமர் மோடியை கட்டுப்படுத்த முடியாமல் ஆர்எஸ்எஸ் திணறுகிறது. சிவலிங்கத்தின் மீதுள்ள தேள்போல பிரதமர் மோடி இருப்பதாக ஆர்எஸ்எஸ்க்கு நெருக்கமானவர்களே கூறுகிறார்கள். தரையில் தேள் இருந்தால் அதனை காலில் உள்ள செருப்பை வைத்துகூட அடித்து விடலாம்.
ஆனால் சிவலிங்கத்தின் மீது தேள் இருப்பதால் எதையும் கொண்டு அடிக்க முடியாது; கொத்தி விடுமே என்று அதனை கைகளால் எடுத்து வெளியே போடவும் முடியாது. இதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் தற்போதைய நிலை’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT