Published : 10 Oct 2018 08:21 AM
Last Updated : 10 Oct 2018 08:21 AM

வடமாநில தொழிலாளர் மீதான தாக்குதல்: ராகுல் காந்தியின் கருத்துக்கு குஜராத் முதல்வர் கண்டனம்

வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு குஜராத் முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் 14 மாத பெண் குழந்தையை பிஹார் தொழிலாளி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, இந்தி பேசும் மக் களுக்கு எதிராக வன்முறை வெடித் துள்ளது. இதனிடையே வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக கங்கிரஸ் எம்எல்ஏவும் ‘ஷத்திரிய தாக்கோர் சேனா’ என்ற அமைப்பினர் தலைவருமான அல்பேஷ் தாக்கோரின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது.

எனவே அல்பேஷ் தான் வன்முறையை தூண்டியதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இதை அல்பேஷ் மறுத்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிரான தாக்குதலை நேற்று முன்தினம் கண்டித்தார்.

இதற்கு குஜராத் முதல்வர் விஜய் ருபானி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இந்தி பேசும் மக்களுக்கு எதிரான வன்மு றையை காங்கிரஸ்தான் தொடங் கியது. ஆனால் வன்முறையை காங்கிரஸ் தலைவர் கண்டிக்கி றார். இது அவருக்கு வெட்கமாக இல்லையா? தனது கட்சி எம்எல்ஏ வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ட்வீட் செய்வதால் தீர்வு கிடைக்காது என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x