Last Updated : 19 Oct, 2018 12:09 PM

 

Published : 19 Oct 2018 12:09 PM
Last Updated : 19 Oct 2018 12:09 PM

காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை

காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற மூன்று தீவிரவாதிகள் எல்லை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''பாரமுல்லா மாவட்டத்தின் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவ முயன்ற மூன்று தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது.

நேற்று (வியாழக்கிழமை) சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சந்தேகிக்கும்படியான ஆட்களின் நடமாட்டம் இருந்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை அடைந்தனர்.

அப்போது, ஊடுருவல்காரர்கள் பாதுகாப்புப் படையினரின் நிலைகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு ராணுவம் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x