Published : 26 Aug 2014 10:33 AM
Last Updated : 26 Aug 2014 10:33 AM

திருப்பதி பிரம்மோற்சவ சுவரொட்டி வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் சுவரொட் டிகளை ஆந்திர ஆளுநர் ஈ.வி.எஸ். நரசிம்மன் திங்கள்கிழமை மாலை வெளியிட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 4-ம் தேதி சக்ர ஸ்நானத்துடன் நிறைவு பெறுகிறது.

இதனையொட்டி, ஆந்திர, தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் ஈ.வி.எஸ் நரசிம்மன் பிரம்மோற்சவ விழாவிற்கான சுவரொட்டிகளையும் அழைப்பிதழ் களையும் திங்கள் கிழமை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜி. கோபால், இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x