Published : 23 Aug 2018 09:20 AM
Last Updated : 23 Aug 2018 09:20 AM
மணிப்பூரில் தீவிரவாத இயக்கத் தின் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மணிப்பூர் மாநிலம் சுரா சந்த்பூர் டவுன் பகுதியில் உஸ்ரா தீவிரவாத இயக்கத்தின் தலை வர் ஒருவரை சிலர் நேற்று சுட்டுக் கொன்றதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதை யடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றினர்.
அவர் உஸ்ரா இயக்கத்தைச் சேர்ந்த லால்மின்தாங் வைபேய் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர் எதற்காக கொல்லப் பட்டார் என்ற விவரம் தெரிய வில்லை. பிரேதப் பரிசோதனைக் காக சுராசந்த்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
சுராசந்த்பூர் பகுதியில் உஸ்ரா தீவிரவாத இயக்கத் சேர்ந்தவர் கள் அதிக அளவில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT